Breaking News

தமிழ் வேட்பாளர் – அடுத்த வார இறுதியில் அறிவிப்பு -சி.வி. விக்னேஸ்வரன்!

 


தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில், அடுத்த வாரம் அறிவிப்புக்கள் வெளியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அநேகமான தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. வேட்பாளராக நிறுத்த சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் ,அதுக்கென நியமிக்கப்பட்ட குழு ஆராய்ந்து வருகிறது.

அடுத்த வாரமளவில் ஒருவரை தெரிவு செய்து அவரின் பெயரை அறிவிப்போம் என தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் என இவ்விடயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.