Breaking News

பாகிஸ்தானில் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஃபைஸ் ஹமீத்தை கைது செய்தது ராணுவம்!

 பாகிஸ்தான் இதுவரை இல்லாத சம்பவமாக முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஃபைஸ் ஹமீத்தை ராணுவம் கைது செய்துள்ளது.

டாப் சிட்டி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, பாகிஸ்தான் ராணுவத்தின் விரிவான விசாரணையின் விளைவாக முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஃபைஸ் ஹமீத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் விளைவாக பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் விதிகளின் கீழ் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் (ஓய்வு) மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என ஐஎஸ்பிஆர் (Inter-Services Public Relations) தெரிவித்துள்ளது.

ஓய்வுக்குப்பின் பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபைஸ் ஹமீத் 2019 முதல் 2021 வரை உளவுத்துறையின் தலைவராக இருந்தார். அப்போது மிகவும் அதிகமான அதிகாரம் படைத்த நபராவ கருதப்பட்டார்.

அப்போதைய ஐஎஸ்ஐ தலைவரும் தற்போதைய ராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் பதவியில் இருந்து முன்கூட்டியே நீக்கப்பட்டபோது ஃபைஸ் ஹமீத் உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது பிரதமர் இம்ரான் கானுக்கு முனீர் ஐஎஸ்ஐ தலைவராக இருப்பதில் விருப்பம் இல்லை என்பதால் மாற்றப்பட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் ராணுவம் ஹமீத் மாற்ற முடிவ செய்தது. இதற்கு இம்ரான் கான் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இதுதான் ராணுவத்துடன் உள்ள தொடர்பு வலுவிழக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

2023 நவம்பர் 8-ந்தேதி டாம் சிட்டி உரிமையாளர் மொயீஸ் அகமத் கான், உச்சநீதிமன்றத்தில் ஹமீத் அவரது பதவியை தவறாக பயன்படுத்துகிறார் என வழக்கு தொடர்ந்தார். அதன்காரணமாக டாப் சிட் வழக்கு உருவானது.

மே 12, 2017 அன்று, ஜெனரல் ஹமீத்தின் உத்தரவின் பேரில், ஐஎஸ்ஐ அதிகாரிகள் உயர்மட்ட நகர அலுவலகம் மற்றும் அகமத் வீட்டில் சோதனை நடத்தி தங்கம், வைரங்கள் மற்றும் பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் கைப்பற்றியதாக அகமது கான் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஹமீத் சகோதரர் சர்தார் நஜப், தன்னை தொடர்பு கொண்டு இந்த பிரச்சனை முடித்து கொடுப்பதாக அணுகியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹமீத்தை தன்னை சந்தித்தார். தன்னிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறித்ததாகவும் அதில் தெரிவித்திருந்தார். ஹமீத் கடந்த 2022-ம் ஆண்டு நான்கு மாதத்திற்கு முன்னதாக ராணுவ தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.