Breaking News

இன்றைய நாளுக்கான வானிலை அறிவித்தல் !

 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                                                               

அனுராதபுரம் - பிரதானமாக சீரானவானிலை.

மட்டக்களப்பு - பிரதானமாக சீரானவானிலை.

கொழும்பு - அடிக்கடி மழைபெய்யும்.

காலி - அடிக்கடி மழைபெய்யும்.

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரானவானிலை.

கண்டி- அடிக்கடி சிறிதளவில்மழை பெய்யும்.

நுவரெலியா - அடிக்கடி சிறிதளவில்மழை பெய்யும்.

இரத்தினபுரி - அடிக்கடி மழைபெய்யும்.

திருகோணமலை - பிரதானமாக சீரானவானிலை.

மன்னார் - பிரதானமாக சீரானவானிலை.