Breaking News

மைத்திரிபாலவிற்கு எதிராக மீண்டும் ஒரு மனுத் தாக்கல்!

 


நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மான்டேக் சரத் சந்திரவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் மனுதாரரின் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தை மீறும் வகையில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .