Breaking News

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

 


நாட்டின் தென் அரைப்பாகத்தில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று (20) தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                                                               

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை.

மட்டக்களப்பு - சிறிதளவில் மழை பெய்யும்.

கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை.

காலி - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர்மழை அல்லது இடியுடன் கூடியமழை பெய்யும் சாத்தியம்.

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை.

கண்டி - பிரதானமாக சீரான வானிலை.

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை.

மன்னார் - பிரதானமாக சீரான வானிலை.