Breaking News

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஸ்ரீதரன் கடிதம்!

 


மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட, சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது”  32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்ப்பதற்காக  அவர்களை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகொள் விடுக்கின்றேன்” இவ்வாறு அக்கடிதத்தில் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.