Breaking News

ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் கொடுத்தார் – நாடாளுமன்றில் அமைச்சர் ரொஷான்!

 


இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தான் இந்த விடயத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என ரொஷான் ரணசிங்க, இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தாம் நியமித்த இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நீக்கவே முடியாது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் நியமித்த இடைக்கால குழு குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.