Breaking News

நீதிபதி பதவி விலகல் - முடங்கப்போகும் யாழ்ப்பாணம்…..!

 


முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நேற்று முன்னெடுத்த கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு செல்லும் விதமாக எதிர்வரும் 4ஆம் திகதி மருதனார்மடத்திலிருந்து யாழ்ப்பாணம்; வரை பாரிய மனிதச்சங்கிலி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் நீதிபதியின் பதவி விலகலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.