Breaking News

நமது இறையாண்மையை காக்க போரிடுகிறோம் - புதினின் நிலைப்பாடு!

 


"கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. 

இரு தரப்பிலும் எண்ணிலடங்கா உயிர் பலிகளும், பெருமளவு கட்டிட சேதங்களும் ஏற்பட்டும் போர் முடிவுக்கு வராமல் 580 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.கடந்த ஆண்டு, உக்ரைனின் டோனெட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk), சப்போரிழியா (Zaporizhzhia) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளை ரஷியா தங்கள் நாட்டுடன் ஒவ்வொன்றாக இணைத்து கொண்டது. 

இணைக்கப்பட்ட இந்த 4 பகுதிகளில் சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி, அத்தேர்தலில் ரஷிய பிரதிநிதிகள் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. ஆனால், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் இந்த தேர்தலை ஒப்பு கொள்ளாமல் புறக்கணித்தன.இந்த தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வீடியோ மூலமாக உரையாற்றினார். 

இந்த உரை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:ரஷியா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்து கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷிய உக்ரைன் போரே ஏற்பட்டது. 

நாம் நமது தாயகத்திற்காக போராடுகிறோம்;  நமது ஒற்றுமைக்காகவும், வெற்றிக்காகவும் நாம் சண்டையிடுகிறோம். இதில் எந்த சர்வதேச சட்டங்களோ, வழிமுறைகளோ மீறப்படவில்லை. ரஷியாவுடன் தற்போது இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பகுதியை சேர்ந்த மக்களும் ரஷியாவுடன் இணையவே விரும்பினார்கள்.இவ்வாறு புதின் அறிவித்துள்ளார்.