Breaking News

இலங்கைக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!



 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் 2 வது போட்டி இன்றையதினம்  (31) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது.

நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அதன்படி களம் இறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்களால், இலங்கை அணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாட முடியவில்லை.

பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி சார்பில் மதீஷ பதிரன 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.