Breaking News

குருந்தூர் மலை விவகாரம் : களத்திற்கு சென்ற நீதவான்!

 தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு நீதிபதி ஆகியோர் இன்று நேரில் சென்று ஆராய்ந்தனர்.

குருந்தூர்மலையில் சட்டவிரோத பௌத்த கட்டுமானத்தை பார்வையிடுவதற்காக இன்று குருந்தூர் மலைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கள விஜயம் செய்தார்.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.