Breaking News

நாட்டின் தற்போதைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

 நாட்டின் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவதான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த பகுதிகளில் மனித உடலுக்கான வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.