Breaking News

புகையிரத சாரதிகள் அனைவரும் பணிப்புறக்கணிப்பில்?

 


இலங்கையின் புகையிரத சாரதிகள் இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி புகையிரத பொது முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் தொடர்பில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறாதமை மற்றும் நியாயமற்ற வரி அறவீடு தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாம் மேலும் வினவியபோது, ​​இது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.