Breaking News

தொடரை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

புனேவில் இந்திய நேரப்படி இரவு 7மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் சானக்கவுக்கும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் முதல் போட்டியில், இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆகவே இன்றைய தீர்க்கமான இரண்டாவது ரி-20 போட்டியில், இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ளன.