Breaking News

தேர்தல் செலவுகளுக்கு கைகொடுக்குமாறு தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அடக்குமுறைகள்,இன அழிப்பு,காட்டி கொடுப்புக்கள்,ஏமாற்றுக்கள், குளிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச்செயும் தனது அரசியல் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை நல்குமாறு தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அனாவசியமான செலவுகளை தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் அவர் சில அவசியமான செலவுகளை செய்வதற்காக நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு இங்கும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் அளிக்கும் எந்தவொரு பணமும் அனாவசியமான முறையில் செலவு செய்யப்படமாட்டாது எனவும் ஒவ்வொரு செலவுக்குமான கணக்கு காட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் அத்துடன் தனது வங்கி கணக்கையும் இணைத்து அறிக்கை ஒன்றை வெளியுடுள்ளார்.