Breaking News

லடாக் தாக்குதல்- 43 சீனா வீரர்கள் பலி- 20 இந்திய வீரர்கள் வீரமரணம்!

டெல்லி: லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சீனா ராணுவத்தினர் 43 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்தினர் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியது. 


இத்தாகுதலில் இந்திய தரப்பில் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக முதலில் கூறப்பட்டது.பின்னர் ராணுவம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளில் இருதரப்புகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்திருந்தன.. இந்த நிலையில் இந்திய தரப்பில் குறைந்தது 20 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. அதேநேரத்தில் இந்தியாவின் தாக்குதலில் 
சீனா ராணுவத்தினர் 43 பேர் பலியானதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ் ஏற்கனவே 5 வீரர்கள் உயிரிழந்ததை உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் சீனா தரப்பில் மிக கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றன தகவல்கள்.