Breaking News

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை !

சிறைகளில் உள்ள ஊழலை ஒழிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளர்கள் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசினார். 

சிறைச்சாலைகளில் ஊழல்  செயல்களுக்கு உதவிய பல அதிகாரிகள் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைகளைத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற ஊழல் அதிகாரிகள் மீது சட்டமா அதிபர் சட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் கூறினார். 

சிறை சேவையை ஒரு கௌரவமான சேவையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.