Breaking News

தேர்தலுக்காக மட்டுமே சிலர் புலிகளுக்கு புகழ் பாடுகிறார்கள் - ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம், மாவீரர்கள் எந்நாளும் போற்றுதலுக்குரியவர்கள். ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசிய்சியல்வாதிகளும், விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றம் இழைத்தார்கள் என்று சொல்லிச் சர்வதேச அரங்கில் இலங்கை அரசை பினைஎடுத்த அரசியல் வாதிகளும், விடுதலைப் புலிகளை அரச படைகளுடன் சேர்ந்து தேடி தேடி வேட்டையாடிய அரசியல் வாதிகளும் இன்று தேர்தல் வந்ததும் புலிகளின் புகழ்பாட ஆரம்பித்துள்ளனர். 

தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப்புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் என்று தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.