Breaking News

இராஜினாமா கடிதத்தை அனுப்பிய மத்திய வங்கி ஆளுநர் !

இலங்கை மக்கள் வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லக்ஷ்மன் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இதற்கமைய அவர் தனது இராஜினாமா கடிதத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தனிப்பட்ட காரணங்களால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 16ம் திகதி மத்திய வங்கி அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பாக செயற்பட முடியாவிட்டால் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி நேரடியாகவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.