Breaking News

கண்ணிமைக்கும் நொடியில் :ரயிலில் மோதிய பாடசாலை மாணவன் ஸ்தலத்திலேயே பலி..!

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒரு வன் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

நேற்று (01.07.2019) இரவு யாழ்ப்பா ணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர ரயிலில் மோதியே குறித்த மாணவன் உயிரி ழந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற் றுள்ளன.

மேலும், கிளிநொச்சி மற்றும் பரந்தன் ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும், விபத்தில் 14 வயதுடைய ராஜேஷ்வரன் லதூஷன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திலேயே குறித்த மாணவன் உயிரி ழந்துள்ளதுடன் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.