Breaking News

கிளிநொச்சியில் வாகன விபத்து : ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடை ந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை நடை பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிரு ந்து பொருட்களை ஏற்றி சென்ற இரு பார ஊர்திகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகி யுள்ளது. முன்னே சென்ற பார ஊர்தி யின் சக்கரத்திலிருந்து காற்று வெளியே றியதில், சடுதியாக குறித்த பார ஊர்தி நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பார ஊர்திக்கு பின்புறமாக சென்ற மற்ற பார ஊர்தி பின்புறமாக மோதி யதில் குறித்த விபத்து நடைபெற்றுள்ளது. இவ் விபத்தில் பார ஊர்தியில் பய ணித்த சாரதி உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநாச்சி பொலிசார் முன்னெடுத் துள்ளனா்.