Breaking News

தர்ஜினியின் அசத்தலால் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரின் சிங்கப்பூர் அணியுடனான போட்டி யில் இலங்கை அணி 88-50 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள் ளது.

இங்­கி­லாந்தின் லிவர்பூல் நகரில் 15 ஆவது வலைப்­பந்­தாட்ட உலகக் கிண் ணத் தொடர் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது. இதில் இலங்கை உட்­பட இம்­முறை 16 நாடுகள் பங்­கேற்­றுள்­ளன. அணிகள் நான்கு குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்டு போட்­டிகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

இதில் குழு A இல் போட்­டி­யிடும் இலங்கை வலைப்­பந்தாட்ட அணி தனது முதல் போட்டியில் சிம்­பாப்­வே­யிடம் 79–49 என்ற அடிப்­ப­டையில் தோல்­வியை சந்­தித்­தது.

இத­னை­ய­டுத்து நடை­பெற்ற வடக்கு அயர்­லாந்து அணி­யு­ட­னான போட்­டியில் 67–-50 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் தோல்­வி­ய­டைந்­தது. இரண்டாம் சுற்­றுக்கு முன்­னேற கட்­டாயம் வெற்­றி­பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் நடப்புச் சம்­பி­ய­னான அவுஸ்­தி­ரே­லிய அணி­யுடன் நேற்­று­முன்­தினம் இலங்கை அணி மோதி­யது.

இப் போட்டியிலும் இலங்கை வலைப்­பந்தாட்ட அணி 99–-24 என்ற புள்­ளிகள் கணக்கில் அதிர்ச்சி தோல்­வியைத் தழு­வி­யுள்­ளது. இந்தத் தோல்வியோடு இலங்கை வலைப் பந்தாட்ட அணி உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாம் சுற் றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

எனினும், இந்த தொடரில் 13 தொடக்கம் 16 வரையிலான இடத்தை பெறும் அணிகளை தெரிவு செய்யும் சுற்றில் சிங்கப்பூர், பிஜி மற்றும் சமோவா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளது. அதன்படி இந்த சுற்றில் தமது முதல் போட்டியிலேயே இலங்கை வலைப்பந்து அணி, சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை எதிர்கொண்டிருந்தது.

லிவர்பூலின் எம்.எஸ் வங்கி அரங்கில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் இலங்கை அணி 88-50 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக தர்ஜினி சிவலிங்கம், 78 முயற்சிகளில் 76 புள்ளிகள் பெற்று போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறினார்.

இதேநேரம், சிங்கப்பூர் அணியின் கேய் வேய் டொய் 16 புள்ளிகளுடன் அவரது தரப்பில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறியிருந்தது குறிப்பிடத் தக்கது.