Breaking News

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித் திட்டம்.!

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித் திட் டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு இன்று (06) முற் பகல் பிபிலை பொது விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும்.

பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினை களைக் கண்டறிந்து அவற்றை தீர்ப் பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறி சேனவின் வழிகாட்டலின் கீழ் ஜனா திபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நாட் டுக்காக ஒன்றிணைவோம்”

தேசிய செயற்திட்டத்தின் ஐந்தாவது செயற்திட்டம் கடந்த முதலாம் திகதி மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானது. மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை, தனமல்வில, மடுல்ல, கதிர்காமம், புத்தள, படல்கும்புர, வெல்லவாய, மெதகம, சியம்பலாண்டுவ, பிபிலை, செவனகல ஆகிய 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 319 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சித்திட்டம் ஒரு வார காலமாக இடம் பெற்றதுடன், இன்று வரை இதன் மூலம் 90,708 பேர் பயனடைந்துள்ளனர்.

1091 திட்டங்களுக்காக 42.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் செலவிடப்பட் டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் பிரதான நிகழ்ச்சித் திட்டங் களான சிறுநீரக நோய்த்தடுப்பு, கிராமசக்தி, தேசிய சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர்களை பாதுகாப்போம், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோரை ஊக்குவித்தல், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா, தேசிய உணவு உற்பத்தி போன்ற பல நிகழ்ச்சித்திட்டங்கள் இந்த வாரம் முழுவதும் அம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன்,

மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள விவசாய,, வீடு, நிலம், தொழில் மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்து பிரச்சினகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின் றன.

மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்கக் கூடிய வகையில் “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” நிகழ்வுகளும் இந்த வாரம் முழுவதும் அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தப் பட்டன. இன்றைய இறுதிநாள் நிகழ்வில் மாவட்டத்தின் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

மாவட்டத்தின் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிகிச்சை நட வடிக்கைகளுக்காக 36 மில்லியன் ரூபா செலவில் வெள்ளவாய தள வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக பிரிவு இன்று ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.