Breaking News

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் இணைவதற்காக இலங்கைக் குழாம் தென் சூடானுக்கு பயணம்

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் கடமையில் ஈடுபடுவதற்காக 61 பேர் கொண்ட இராணுவ குழாம் இன்று (3ஆம் திகதி) அதிகாலை தென் சூடான் நோக்கி பயணித்துள்ளது.

11 இராணுவ உயரதிகாரிகளைக் கொண்ட குறித்த குழுவினரில் இரா ணுவத்தினரின் மருத்துவ பிரிவின ரும் அடங்குகின்றனர். நாட்டிலிருந்து தென் சூடானுக்கு பயணிக்கும் ஆறா வது குழுவாக இவர்கள் காணப்படு வதுடன், அவர்கள் அங்கு ஒரு வருடத் திற்கு சேவையாற்றவுள்ளனர்.

இந்தக் குழுவினர் சூடனை சென்றடைந்ததும், அங்கு தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள 66 படை உறுப்பினரைக் கொண்ட குழு இலங்கைக்கு மீள வருகை தரவுள்ளது. மீட்பு.