Breaking News

கன்னியா போராட்டத்திற்குச் செல்லும் மக்களுக்கு இராணுவம், பொலிஸ் தொந்தரவு.!

திருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப் பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடு மையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை முன்னெடுத்துள்ளனா். 

முல்லைத்தீவு ஊடாக கன்னியா வுக்கு செல்லும் பஸ்களில் இளைஞர் கள் மற்றும் பெண்கள் என பெருந்திர ளானோர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தற்போது சென்று கொண்டிருக்கும் வழியில் புல் மோட்டைப் பகுதியில் புல் மோட்டை முல்லைத்தீவு வீதியிலும் மற்றும் புல்மோட்டை திருகோணமலை வீதியி லும்

3 இடங்களில் போராட்டத்திற்கு செல்லும் பஸ்கள் மட்டும் தனியாக அடை யாளப்படுத்தப்பட்டு பஸ்களில் செல்பவர்கள் கடுமையான உடல் உடமை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவதோடு போராட்டத்திற்கு செல்பவர்க ளையும் பஸ்களையும் இராணுவம் மற்றும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் பருத்தித்துறையிலிருந்து புல்மோட்டை ஊடாக கன்னியா போராட் டத்திற்கு சென்ற பஸ்ஸை வழிமறித்து படையினர் மற்றும் போலீசார் பரிசோ தனைகளை செய்தபின் பஸ்ஸின் முன் சில்லுக்கு காற்று போகும் விதமாக இரகசியமாக கூரிய ஆயுதத்தால் குற்றி காற்றுபோக செய்து பயணத்தை தடை செய்யும் விதமாக நடந்தது கொள்கின்றார்கள்.


இதனால் போராட்டத்துக்கு செல்பவர்கள் வழியில் தடங்கல்கள் ஏற்பட்டுள் ளதோடு அச்சமடைந்துள்ள நிலைமையும் காணப்படுகின்றது.