Breaking News

யாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; வாகனத்தில் பயணித்த பொலிஸாா் கைது.!

வவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாக னத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.

வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து நேற்று வாகனம் ஒன்றில் சிலர் யாழ்ப் பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென் றுள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில் வைத்து பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான பொருளினை அவதானித்த போது அத னுள் 4கிலோ 400கிராம் கேரளா கஞ் சாவை மீட்டுள்ளனர்.

இதன்போது வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்து விசாரணகைளை மேற்கொண்ட பொலிசார் குறித்த நபர் வவு னியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வன்னி நாயக்க என்பர் எனத் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் கஞ்சாவை சாவகச்சேரிப் பொலிஸ் நிலை யத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.