Breaking News

அந்­நி­யத்­ த­லை­யீ­டு தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்குமாறு சீனா இலங்கைக்கு எச்சரிக்கை.!

அந்­நி­யத் ­த­லை­­யீ­டுகள் தொடர்பில் சிரத்­தை­யுடன் இருக்­கு­மாறு இலங்­கையை சீனா கேட்­டுள்­ளது. இது போன்ற அந்­நி­யத்­ த­லை­யீ­டுகள் ஒரு­போதும் நன்­மை­ய­ளிக்­காது. மாறாக அவை பிரச்­சி­னை­யையும் அழி­வு­க­ளை­யுமே கொண்­டு­வரும் என இலங்­கைக்­கான சீனத் தூதுவர் தெரி­வித்­துள்ளார்.

சீனா சுயா­தீ­ன­மா­னதும் அமை­தி­யா­ன­து­மான கொள்­கை­க­ளைக் கொண்­ட­ நா­டாகும். இது ஒரு­போதும் உள்­ வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டா­ததும் அதனை கடு­மை­யாக எதிர்ப்­பதும் ஆகும். சீனாவும் இலங்­கையும் அந்­நி­யத்­ த­லை­யீ­டுகள் பற்றி அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

நாங்கள் சுயா­தீ­ன­மாக இருக்­கவும் உரிய முடி­வு­களை எடுக்­கவும் முய­ல­ வேண்டும். இதுவே சிறந்த எதிர்­கா­லத்­துக்­கான பாதை­யாகும். ஹொங்கொங் சீனா­விடம் கைய­ளிக்­கப்­பட்ட 22ஆவது நிறைவு நாள் விழா­வான ஜூலை முத லாம் திகதி சில அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­டன.

ஹொங்­கொங்கில் ஏற்­பட்ட அண்­மைய சம்­ப­வங்கள் உல­கிற்கு அதிர்ச்­சி­ய­ளிப்­ப­வை­யாகும். இது தொடர்பில் மறுநாள் பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார செய­லாளர் ஜெரமி ஹன்ட் தெரி­வித்த கருத்­துகள் அதி­ர்ச்­சி­யூட்­டக்­ கூ­டி­ய­வை­யாகும். ஐக்­கிய இராச்­சியம், ஹொங்கொங் மக்­களின் பின்னால் அவர்­களின் பாது­காப்பு தொடர்பில் உள்­ளது.

பிரித்­தா­னியா ஹொங்கொங் மக்­களின் சுதந்­தி­ரத்­துக்­காக பரிந்­து­ரைத்­துள்­ளது. ஹொங்கொங் அதி­கா­ரிகள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைப் பயன்­ப­டுத்தக் கூடாது. சீனா ஹொங்கொங் தொடர்­பிலும் அங்­குள்ள சீன மக்கள் தொடர்­பிலும் இறை­யாண்­மையை 1997ஆம் ஆண்­டி­லி­ருந்து பெற்­றுள்­ளது.

ஹொங்கொங் மீதான ஐக்­கிய இராச்­சி­யத்தின் 1840 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆரம்­பித்த 150 வருட கால­னித்­துவ ஆட்சி முடி­வுக்கு வந்­துள்­ளது. மறைந்த கால­னித்­துவ ஆட்­சியின் புகழில் இன்றும் சிலர் குளிர்­காய்­கின்­றனர் என்ற கருத்­து­களை பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரச் செய­லாளர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அவை அதிர்ச்­சி­யூட்­டு­ப­வை­யாக அமை­யப்­பெற்­றுள்­ள­தாக சீனத் தூதுவர் தெரி வித்தார். மேலும் ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கைய ளித்த பின்னர் ஹொங்கொங் பற்றி மேற்பார்வை செய்ய எந்தவிதமான அதி காரமும் இல்லை எனவும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளாா்.