Breaking News

இம்­ மாதம் முதல் அரச ஊழி­யர்­க­ளுக்கு 2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு

அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு உள்­ளிட்ட சம்­பளம் மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களின் அதி­க­ரிப்பு இன்று திங்கட்கிழமை முதல் நடை­மு­றைப்படுத்­தப்­ப­டவுள்­ள­தாக நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அதற்­க­மை­வாக 11 இலட்சம் வரை­யி­லான அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான இடைக்­கால கொடுப்­ப­ன­வாக 2500 ரூபா, பாது­காப்பு பிரி­வுக்­கான மேல­திக கொடுப்­ப­னவு, ஓய்­வூ­திய கொடுப்­ப­னவில் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணல் மற்றும் விசேட தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்­கான மேல­திக கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரித்தல் போன்­ற­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த கொடுப்­ப­ன­வு­களை வழங்­க­வென அர­சாங்கம் 40 ஆயிரம் மில்­லியன் ரூபா நிதியை ஒதுக்­கீடு செய்துள்­ளது. அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான இடைக்­கால கொடுப்­ப­னவு 2500 ரூபா வழங்கப்பட­வுள்­ளது. எனினும் அரச அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாழ்க்கை செல­வுக்­கான கொடுப்­ப­னவில் எவ்­வித மாற்றமும் ஏற்­ப­ட­வில்லை.

வாழ்க்கைச் செல­வுக்­காக வழங்­கப்­பட்டு வந்த 7,800 ரூபாவை அவ்­வாறே பெற்­றுக்­கொ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 2019 வர­வு­–செ­ல­வுத்­திட்ட யோச­னை­களில் முப்­படை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­படும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரிப்­ப­தாக நிதி அமைச்சர் ஒப்­புக்­கொண்­டி­ருந்தார்.

முப்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­படும் கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு மேல­தி­க­மாக அதி­கா­ரி­க­ளுக்­கென வழங்­கப்­படும் மாதாந்த கொடுப்­ப­னவை 2019 ஜன­வ­ரி­மாதம் முதல் அமு­லுக்கு வரும் வகையில் 23,231 ரூபா வரையும் ஏனைய பதவி தரத்­தி­லானவர்களுக்கு மாதாந்த கொடுப்­ப­னவு 19,350 வரை யும் அதி­க­ரிக்­கப்­ப­ட்டுள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக இன்­று­முதல் முப்­ப­டை­களை சேர்ந்­த­வர்­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு வந்த வீட்டு கூலிக்­கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வுள்ளது. அதேபோன்று முப்படையினருக்குமான கொமாண்டோ கொடுப்ப னவு இன்று முதல் 5000 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கென அரச நிதியிலிருந்து 1175 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.