Breaking News

அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மன­நலம் பாதிக்­கப்­படும் வாய்ப்பு அதிகம்.!

Published by R. Kalaichelvan on 2019-07-03 10:25:25 சாதா­ரண பொது­மக்­களை விடவும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மன­நலப் பிரச்­சினை ஏற்­படும் அபாயம் மிகவும் அதி­க­மா­க­வுள்­ள­தாக பிரித்தா­னிய புதிய ஆய்­வொன்று தெரி­வித்துள்ளது. 

இந்த ஆய்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிரித்­தா­னி­யா­வி­லுள்ள சாதா­ரண பொது­மக்­களை விடவும் 26 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான அளவில் மன அழுத் தம், பதற்றம் மற்றும் விரக்­தியை உணர்­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

பர­ப­ரப்­பான வேலைத் திட்­டங்கள், இணை­யத்­தளம் மூல­மான அவ­தூறு செய்யும் விமர்­ச­னங்­க­ளி­லி­ருந்து பாது­காப்பின்மை என்பவை கார­ண­மாக அர­சி­யல்­வா­திகள் பெரிதும் மன அழுத் தத்திற்­குள்­ளா­வ­தாக லண்டன் கிங்ஸ் பல்­க­லைக் ­க­ழகத்தைச் சேர்ந்த மேற்­படி ஆய்­வா­ளர்கள் தெரி­வித்துள்ளனா்.

இந்த ஆய்வு பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற பிர­திநிதிகள் சபைகளின் அனைத்து 650 உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்கி நடத்தப்பட்டிருந்தது. இதன்­போது மனதை ஒரு­மு­கப்­ப­டுத்­து­வ­தி­லான போராட்டம், உறக்­கத்தில் ஆழ்­வதில் எதிர்­கொள் ளும் சிரமம் மற்றும் நாளாந்த செயற்­பா­டு­களில் மகிழ்ச்­சி­ய­டைய முடியா திருப்பது என்­பன குறித்து பாரா­ளு­மன்ற உறுப்பினர்களிடம் கேள்­விகள் வின­வப்­பட்­டன.

அதே­ச­மயம் இந்த ஆய்வில் 2,902 பொது­மக்­களும் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தனர். பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் மன­நலம் தொடர்பில் நடத்­தப்­பட்ட முத­லா­வது ஆய்வு இது­வென மேற்­படி ஆய்வில் பங்­கேற்ற மருத்­துவ கலா­நிதி டான் போல்டர் தெரி­வித்துள்ளாா்.