Breaking News

தொகையான கற்றாழைக் கன்றுகளுடன் இருவர் கைது (காணொளி)

அனுமதிப்பத்திரமின்றி கடல் மார்க்க மாக கற்றாழைக் கன்றுகளைக் கொண்டு சென்ற இருவர்,​ மன்னார் – பேசாளை பகுதியில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பேசாளை கடற்பகுதியில் கடற்படை யினர் நேற்று (24) முன்னெடுத்த சுற்றி வளைப்பின்போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயணித்த டிங்கிப் படகொன்றும் கைப்பற்றப்பட் டுள்ளது.

22 பொதிகளில் பொதியிடப்பட்ட 618 கிலோகிராம் கற்றாழைக் கன்றுகள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் மற்றும் பேசாளைப் பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 47 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள், சிலாவத்துறை வன பாது காப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.