Breaking News

மகளின் திருமணத்திற்காக பரோலில் வந்த நளினி..!

தமிழகத்தின் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவ ரது மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளாா். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் கடந்த 28 ஆண்டு களாக சிறைத்தண்டனையை அனுப வித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் பல்வேறு கால கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.

அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகளை ஏற்கெனவே சிறைகளில் கழித்துவிட்டதால், குற்றவியல் நடை முறைச் சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அவர்களை விடுதலை செய்ய முடிய வில்லை.

இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘ஊடகங்களிடம் பேசக்கூடாது…’ என் பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன், அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, வேலூர் சிறையிலிருந்து இன்று (25 ஆம் திகதி) காலை வெளியே வந்த நளினியை, பலத்த பாதுகாப்புடன் பொலிஸார் சத்துவாச்சா ரிக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.