Breaking News

யாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்.!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கட மையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் கிடைத்துள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என வும், பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவி ன்றி இருப்பதாகவும் கூறியே இவர்கள் இடமாற் றம் செய்யப்பட்டுள்ளனா். குறித்த இடமாற்றம், வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ன்ணாடோவின் பணிப்புரையின் கீழ் நடைபெற்றுள்ளது. இதேவேளை கடந்த மாதம் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையத்தின் பெருங் குற்ற பிரிவில் கடமையாற்றிய பத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமா கும்.