Breaking News

ஜெனீவா தீர்மானத்துடன் சர்வதேச சமூகத்துடனும் பேச்சுவார்த்தை தேவை - ரணில்

ஜெனீவா தீர்மானத்தில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டுமென பிரத மர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள் ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தில் காணப்படும் சில விடயங் கள் குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர் வின் போது அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் அடிப் படையில் இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தில் இறுக்கமான நிலைப் பாட்டை பின்பற்றுவதாக சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை இராணுவ அதிகாரியை மாலியிலிருந்து திருப்பியழைக்குமாறு ஐக்கிய நாடு கள் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.