Breaking News

கும்புறு மூலை அரச கூட்டுத்தாபன காணியை இராணுவத்திற்கு வழங்காதீா்கள்.!

மட்டக்களப்பு கும்புறு மூலையில் அரச அச்சக் கூட்டுத்தாபனம் அமைக்கப் பட்ட காணியை இராணுவத்துக்கு வழங்கும் முயற்சியை உடன் கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோற ளைப் பற்று பிரதேச செயலாளர் பிரி வின் கீழ் உள்ள, கும்புறுமூலை முச் சந்தியின் அருகில் ஸ்தாபிக்கப்பட்டி ருந்த அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியை, கிழக்கு மாகாண காணி ஆணையாளர், இரா ணுவத்திற்கு வழங்கு வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தான் அறிந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கு அனுப்பி வைத் துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக் கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இக் காணியில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் உட்பட பல தொழில் பேட்டை களை எதிர்காலத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாலும், இக் காணியிலோ அல்லது இதற்கு அருகாமையிலோ இராணுவ முகாம் அமைக்கும் திட்டத்திற்கு காணியை வழங்காதீா்கள் எனத் தெரிவித்துக் கொள் கின்றேன்.

ஆகவே உரிய தரப்பினரிடமிருந்து எனது இக் கடிதத்திற்குரிய பதிலையும், நடவடிக்கைகளையும் கோருகிறேன். என குறிப்பிட்ட கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் ஆளுநர், மாகாண காணி ஆணையாளர் கோறளைப்பற்று பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.