Breaking News

இலங்கை – பிலிப்பைன்ஸ் இரண்டாம் நிலை அரசியல் ஆலோசனை மணிலாவில்!!!

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுடனான இரண்டாம் நிலை அரசியல் ஆலோசனைக் கூட்டம் மணிலாவில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் இரு நாட்டு உறவுகள் மற்றும் ஆசியாவிலும் அதன் பிராந்தியங்களின் அபிவிருத்தி கள் தொடர்பாகவும் இரு தரப்பும் பரி மாறிக் கொண்டன. மேலும் இவ் இர ண்டாம் நிலை சந்திப்பில் இரு நாடு களுக்கிடையிலான இராஜதந்திர உற வுகள் ஆரம்பித்து 58 வருட பூர்த்தியை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி கொண்டாடவும் தீர் மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கிடையிலான முதலாவது அரசியல் ஆலோசனை அமைப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் ஆலோசனைகளின் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை இலங்கை யில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.