Breaking News

வடமாகாணத்தின் இன்றைய நிலை கவலையளிக்கிறது ; கெஹெலிய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பெற் றுக்கொடுத்த வடக்கு மாகாணசபை இன்று முதல் மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படுவது தொடர்பில் கவலை அடைகின்றோம்.  

இதற்கான பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண் டுமென கூட்டு எதிரணியின் முக்கி யஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினரு மான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளாா்.

வடமாகாண சபை இன்று முதல் கலையவுள்ளமை தொடர்பில் விபரிக்கையில் கெஹெலிய ரம்புக்வெல்ல வடக்கு மாகாணசபையின் இன்றைய நிலையை எண்ணி அதனை உருவாக் கிய முன்னைய அரசாங்கம் என்ற வகையில் கவலை அடைகின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலேயே இந்த மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டது. 100 வீதம் அதற்கான பிரதிபலனை அடைய முடியாவிடினும் அதனால் ஒருசில நல்ல விடயங்களும் நடைபெற்றன என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

யுத்தம் முடிவடைந்ததும் 30 வருடங்களின் பின்னர் வடக்கு மக்களுக்கு தமது மாகாணத்திற்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்வதற்கான உரி மையை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்தார்.

இதன்மூலம் மனிதாபிமானமும் ஜனநாயகமுமே வெற்றிபெற்றன.அன்று அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இன்று இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இன்று முதல் வடமாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சபையாக செயற்படபோகின்றது. மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் தாமதமடையும் நிலைமையே காணப்படுகின்றது.

இவ்வாறு தேர்தலை தாமதப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை. குறிப்பாக இந்த மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்படுவதற்கான காரணத்தை உருவாக்கிய சட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது.

தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அந்த சட் டத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத் தது. இல்லாவிடின் அந்த சட்டமூலம் தோல்வி அடைந்திருக்கும் எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்து தேர்தல் தாமத மடைவதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தல் தாமதம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

நாம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வடக்கு மக்களின் ஜனநாயகத்தை உறுதிசெய்தோம். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று அந்த மக்களின் வாக்குரிமை தாமதமடைவதற்கு காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.