Breaking News

அரசாங்கத்தில் நடைபெறும் மோசடிகளுக்கு ஐ.தே.க.வே துணை நிற்பதாக - வாசுதேவ.!

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள கருத்தில் பல விடயங்கள் மறைந்து காணப்படுவதாக தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி டி.எஸ். சேனாநாயக்கவின் காலத்தில் மோசடிகள் நடைபெறவில்லையெனத் தெரி வித்துள்ளாா். 

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் பாரிய மோச டிகள் நடைபெற்றுள்ளது. உதாரணமாக மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தினை குறிப்பிடலாமெனத் தெரிவித்துள்ளாா். மேலும் கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கொள்கைகள் சிறப்பா னதாக காணப்பட்டது. அதன் காரணமாகவே ஒன்றிணைந்தேன். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக காணப்படுகின்றது என்ற ரீதியிலும் குறித்த விடயத்தினை கருதலாம். அரசாங்கத்தில் நடைபெறுகின்ற ஊழல் மோசடிகள் அனைத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சியே துணைபோயுள்ளதாகத் தெரிவித்துள் ளாா்.