Breaking News

மைத்திரி-ரணிலை வீட்டிற்கு அனுப்பி பௌத்த சிங்கள ஆட்சி நடக்கும் - மகிந்த.!

ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசினால் முன்வைக்கப்பட் டுள்ள புதிய அரசியலமைப்பில் தன்னால் பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த தர் மத்திற்கு பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளாா். 

வெகுவிரைவில் மக்கள் எதிர்பார்க் கின்ற புதிய அரசாங்கத்தை அடுத்த தேர்தலின் பின்னர் அமைத்துக் காட்டு வதாகவும் மஹிந்த ராஜபக்ச சூளு ரைத்துள்ளார்.

தென்னிலங்கையின் கால – அம்பலா ங்கொடை பிரதேசத்திலுள்ள வெல் துவ ஸ்ரீதபோதாராம விகாரைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்தி ருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அங்கு நடைபெற்ற சமய வழி பாட்டிலும் கலந்துள்ளாா்.

தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்திலும் உரையாற்றி னார். இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ச, பௌத்த மதத்தின் தேவைப்பாட்டினை உணர்ந்த கர்தினால் மெல்கம் ரஞ் ஜித் ஆண்டகையை விடவும் பௌத்த அரசியல்வாதிகளுக்கு அதன் பெறுமதி உணராதிருப்பது தொடர்பாக கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இதேவேளை அடுத்த தேர்தலை நல்லாட்சி அரசாங்கம் நடத்தும் பட்சத்தில் புதிய அரசாங்கத்தை அதன் பிறகு அமைத்துக்காட்டுவதாக சூளுரைத்தார். அடு த்த தேர்தலுக்கு முன்னரே புதிய அரசாங்கத்தை உருவாக்க முடியுமானால் அதுவும் சிறப்பென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளாா்.