Breaking News

வட்டுக்கோட்டையில் நள்ளிரவு தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை-அராலிப் பகுதியில் நேற்றிரவு பயங்கரக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராலி வடக்கு செட்டியா மடம் பகுதி யிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றி ரவு மேற்படி பகுதியிலுள்ள வீடொன் றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட் டில் இருந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரையும் கூரிய ஆயுதங் களால் தாக்கிவிட்டு தங்க ஆபரணங் களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

படுகாயமடைந்த தந்தையும் மகளும் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பா ணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர்.  மேலதிக விசாரணைகளை பொலிஸாா் முன்னெடுத்துள்ளனா்.