ஜனாதிபதி கொலை சதி ; கைதாகியுள்ள இந்தியப் பிரஜையிடம் விசாரணை.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கரவாத தடைச் சடத்தின் கீழ் இன்றைய தினம் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளார்.
கொலைச் சதி விவகாரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரி வின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் நேற்று மூன்றாவது நாளாக 10 மணி நேர விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த வாரத்தின் வியாழனன்று 9 மணி நேரமும், வெள்ளியன்று 10 மணி நேரமுமாக 19 மணி நேரம் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ள நாலக டி சில்வாவிடம் நேற்று காலை 9.15 முதல் இரவு 7.15 வரை விஷேட விசாரணைகள் நடைபெற்றுள்ளன.
நேற்றும் அவரிடம் விசாரணைகளை முழுமைப்படுத்த முடியாமல் போனதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசெகர, இன்னுமொரு நாள் எஞ்சிய விசாரணைகளை முன்னெடுக்க அவரை அழைக்க விசாரணையாளர்கள் தீர்மானித்துள்ளனா்.
இதனிடையே இன்றைய தினம் இக் கொலை சதி விவகாரத்தில், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் நிலையில், அவர் கோட்டை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளாா்.
கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவ்வாறு அவர் ஆஜர்ச் செய்யப் படவுள்ள நிலையில், நடைபெறும் விஷேட விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த வாரத்தின் வியாழனன்று 9 மணி நேரமும், வெள்ளியன்று 10 மணி நேரமுமாக 19 மணி நேரம் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ள நாலக டி சில்வாவிடம் நேற்று காலை 9.15 முதல் இரவு 7.15 வரை விஷேட விசாரணைகள் நடைபெற்றுள்ளன.
நேற்றும் அவரிடம் விசாரணைகளை முழுமைப்படுத்த முடியாமல் போனதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசெகர, இன்னுமொரு நாள் எஞ்சிய விசாரணைகளை முன்னெடுக்க அவரை அழைக்க விசாரணையாளர்கள் தீர்மானித்துள்ளனா்.
இதனிடையே இன்றைய தினம் இக் கொலை சதி விவகாரத்தில், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் நிலையில், அவர் கோட்டை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளாா்.
கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவ்வாறு அவர் ஆஜர்ச் செய்யப் படவுள்ள நிலையில், நடைபெறும் விஷேட விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.