Breaking News

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தற்கொலையை தூண்டும் பரீட்சை!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையானது முடிவை தாங்கி கொள்ள முடி யாமல் தற்கொலைக்குச் செல்லும் அளவிற்கு பரீட்சையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அற்ற ஒரு பரீட்சையாக இந்தப் பரீட்சை காணப்படுகின்றது என்று பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்புப் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளாா். 

.முஹம்மட் நஸீர் தெரிவித்தார். வை. எம்.எம்.ஏ. இன் அட்டாளைச் சேனை ஏற்பாட்டில் அதன் தலைவரும், ஊடக வியலாளருமான தேசகீர்த்தி எம்.ஐ. எம். றியாஸ் அதிபர் தலைமையில் ”வித்துகளுக்கு விருது வித்தகர்களு க்கு வாழ்த்து” எனும் தொனிப் பொரு ளில் நடைபெற்ற மாபெரும் கௌர விப்பு நிகழ்வு நேற்று முன்தினம் மாலை (24) மீனோடைக்கட்டு அல் சக்கி மண் டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு மேலும் தெரிவிக்கையில்,

எமது பாடசாலை வலயத்தில் முதலிடம் பெறவேண்டும் என்ற சிந்தனையில் பாடசாலை சமூகத்தினரும், தனது பிள்ளை தேசிய ரீதியாகவோ அல்லது மாவட்டத்திலோ முதலிடம் பெறவேண்டும் என்ற சிந்தனையில் பெற்றோர்க ளும், ஆசிரியர்களும் இரவு பகல் பாராது செயற்பட்டு வருகின்றனர்.

இவை இரண்டுக்கும் நடுவில் எமது சின்னஞ் சிறுசுகள் பல கஷ்டங்களை எதிர்கொண்டு இருபக்கமும் அகப்பட்டு தத்தளிக்கின்றனர். இவ்வாறு பரீட் சையை எதிர்கொண்டதன் பின்னர் அப் பரீட்சை பெறுபேறுகள் வரும்வரை ஒரு நின்மதியற்றவர்களாக பாடசாலை சமூகத்தினரும், பெற்றோர்களும் காணப்படுகின்றனர்.

ஆனால் பெறுபேற்றின் மூலம் ஓரிரு புள்ளிகளினால் தனது சித்தியை தவற விட்டோம் என்ற மன உளைச்சலுக்கு சில மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளாகி விடுகின்றனர்.

இதில் சில மாணவர்கள் அதைத் தாங்கும் சக்தியற்றவர்களாக மாறி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு தற்கொலைக்குச் சென்று விடுகின் றனர். அந்தளவுக்கு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அற்ற ஒரு பரீட்சையாக இப் பரீட்சை அமைந்துள்ளது.