விஜயகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக குற்றத் தடுப்பு பிரிவினர்.!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவா்களின் கருத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அதிப ருக்கு சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இதுவரை 25 பேரி டம் வாக்கு மூலம் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதன்படி அமைச்சர் வஜிர அபேவர்த்தன, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முல் லைத்தீவு மாவட்ட செயலாளர், வவு னியா மாவட்ட செயலாளர் மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந் நிலையில் விஜயகலா மகேஸ்வரனிடம் இன்று அல்லது நாளை வாக்குமூலப் பதிவு மேற்கொள்ளப்படுமென எதிர்பாா்க்கப்படுகின்றது.