Breaking News

மன சோர்வினாலும், விரக்தியினாலுமே அவ்வாறான வார்த்தைப் பிரயோகம் - விஜயகலா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலி களை மீண்டும் உருவாக்குவதே தமது இலக்காக அண்மையில் கூறிய சர்ச்சை க்குரிய கருத்தினால் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் விஜயகலாவிடம் தொடர்ந்து 3 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனா். 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திட்டமிட்ட குற்றங்கள் தடுப் புப் பிரிவினர் விஜயகலாவின் வீட் டில் நேற்று பிற்பகல் 3 மணி தொடக் கம் மாலை 6 மணி வரை விசாரணை களை நடாத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். 


விசாரணையில் விஜயகலா, தான் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சி குறித்தே மேடையில் பேசியதாகவும் ஒரு போதும் விடுதலைப் புலிகளை மீள உரு வாக்குவதை நோக்கமாக வைத்து செயற்படுபவர் அல்ல 

மேலும் அந்த வார்த்தை பிரயோகத்தை கூறிய காலத்தில் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களால் ஏற்பட்ட மன சோர்வினாலும், விரக்தியினாலுமே அவ் வாறான வார்த்தைப் பிரயோகம் தன்னையும் அறியாமல் வெளிப்பட்டதாக கூறி யதாக விசாரணை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளாா்.

தனது பேச்சு, ஊடகங்களில் ஒலிபரப்பாகிய பின்னரே தனது வார்த்தைப் பிர யோகங்களின் விளைவை சிந்தித்ததாகவும் விஜயகலா தெரிவித்துள்ளார்.