Breaking News

கோத்தா­வுக்கோ சஜித்­திற்கோ ஆட்­சி கிடைத்தால் போராடுவோம் - அநுரகுமார

மக்கள் ஆட்­சியை அமைப்பதற்காகவே மக்கள் போராட்­டத்­தையே நாமும் முன்­னெ­டுத்துள்ளோம். இப்­போது நடை­பெறும் ஊழல் ஆட்­சியை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய பொறுப்பு மக்கள் அனை­வ­ரிடமும் உள்­ளதாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்துள்ளாா். 

கோத்­த­பாய ராஜபக்ஷவுக்கோ சஜித் பிரே­ம­தாஸ­விற்கோ கொடுத்துவிட்டு மீண்டும் மக்கள் நெருக்­க­டியை சந்­திக்க வேண்டாமெனத் தெரிவித்துள் ளாா்.  மக்கள் விடு­தலை முன்­ன­ணி யின் மக்கள் சந்­திப்பு நேற்று முன்­தினம் அநு­ரா­த­பு­ரத்தில் நடைபெற்ற போது கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கையில் இவ்வாறு தெரிவித்துள் ளாா். 

 மேலும் தெரிவிக்­கையில், 

நாட்டு மக்கள் அனை­வ­ரதும் தேவைகள் சரி­யாக பூர்த்­தி­யா­கக்­ கூ­டிய வகை­யிலும், அனைத்து இன மக்­களின் உரி­மை­களும் பலப்­ப­டக்­ கூ­டிய வகை­யி லும் இந்த நாட்டின் ஆட்சி இடம்­பெற வேண்டும். மக்­களின் தேவையும் ஆட்­சி­யா­ளரின் நோக்­கமும் ஒன்­றாக இருக்­கக்­கூ­டிய மக்கள் ஆட்­சி­யாக மாற வேண்டும். 

பெரும்­பா­லான மக்­களின் நோக்கம் என்­ன­வாக உள்­ளதோ அதுவே மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யாக எமது நோக்­க­மா­கவும் உள்­ளது. மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும், மக்கள் நலன் காக்­கப்­பட வேண்டும், உரி­மை­களும் சலு­கை­களும் சரி­யாக சென்­ற­டைய வேண்டும். 

நாட்டில் எந்த இனத்­த­வ­ராக இருந்­தாலும் அவர்­க­ளுக்­கான உரி­மைகள் கிடை க்க வேண்டும். நாட்டின் பொரு­ளா­தாரம் பல­ம­டைய வேண்டும், வேலை­யி ல்லா பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும் என்ற மக்­களின் நோக்­கங்­களே எமக்கும் உள்­ளன. 

இது தான் மக்கள் ஆட்­சி­யா­கவும் அமைய முடியும். ஆனால் இன்று மக்கள் ஆட்சி இடம்­பெ­ற­வில்லை. நாட்டில் இடம்­பெறும் பாரிய ஊழல், கள­வுகள், போதைப்­பொருள் கடத்­தல்கள் அனைத்­துமே அரச மாளி­கை­களில் இடம்­பெ­று­கின்­றன. சாதா­ரண கள­வுகள் குறித்து நாம் பேசு­கின்றோம். 

ஆனால் மிகப்­பெ­ரிய ஊழல் குற்­றங்கள் அனைத்­துமே அரச மாளி­கை­களில் தான் இடம்­பெ­று­கின்­றன. இதுவே நாட்டை ஊழல்­வாத நாடாக மாற்­றி­யுள்­ளது. மக்கள் நெருக்­க­டி­களை சந்­திக்­கவும், பொரு­ளா­தாரம் பாரிய வீழ்ச்சி காணவும் இதுவே கார­ண­மாக அமைந்­துள்­ளது. 

இந்த ஆட்சி மக்கள் ஆட்சி அல்ல. இது ஊழல் வாத ஆட்­சி­யாகும், மக்கள் மீது வரிச்சுமை­களை சுமத்தி அதன் மூல­மாக அர­சாங்கம் சுக­போக வாழ்க்­கையை வாழ்ந்து வரு­கின்­றது. அதற்­கா­கவே இவர்கள் ஆட்­சி­யிலும் உள்­ளனர். கடந்த 70 ஆண்­டு­க­ளாக இந்த ஊழல் ஆட்­சியே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

ஆகவே இந்த ஆட்சி தன்­மையை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய கடமை  அனை­வ­ருக்கும் உள்­ளது. இந்த மக்கள் ஆட்­சியை மக்கள் விடு­தலை முன்­ன­ணியை சார்ந்த அணி­யினால் மட்­டுமே உரு­வாக்க முடியும். கோத்­த­பாய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால் நல்­லது என சிலர் தெரிவித்துள்ளனா். 

சஜித் பிரே­ம­தாச வந்தால் சிறப்பென மேலும் சிலர் கூறு­கின்­றனர். இவர்­களை ஆட்­சிக்கு கொண்­டு­வந்து பார்த்தால் தெரியும். கடந்த 70 ஆண்­டு­க­ளாக இவர்­க­ளுக்கு ஆட்­சியை கொடுத்­ததன் விளை­வு­க­ளையே நாம் சந்தித்துக்கொண்டி ருக்கின்றோம். 

இப்­போதும் இவர்­க­ளுக்கு தான் ஆட்­சியை கொடுப்போம் என மக்கள் நினைத் தால் கோத்தபாய ராஜபக் ஷவுக்கோ அல்லது சஜித் பிரேமதாசவிற்கோ ஆட் சியை கொடுத்துப்பாருங்கள். ஆனால் ஆட்சியை கொடுத்துவிட்டு மீண்டும் போராடத் தயாராக வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.