Breaking News

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகி யோரை நீதிமன்றில் ஆஜரகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 

அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி நீதி மன்றில் ஆஜராகுமாறு மீண்டுமொரு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தா நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்ய ப்பட்டுள்ள வழக்கு ரீதியாகவே அழை ப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளதாக போலி ஆவணங்கள் வெளியாகியுள்ளன. 

இவ்வாறு செயற்பட்டதினால் இனங்களுக்கிடையிலான நல்லுறவை பாதிக் கும் வகையில் செயற்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் சாட்சிகளாக தெரிவாகியுள்ளனா்.