Breaking News

விஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமாம் கோத்தா.!

சர்­வ­தேச ரீதியில் பயங்­க­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட விடு­தலைப் புலிகள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயற்­பா­டாகும். 

எனவே அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­வ­ருக்கு எதி­ராக எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கையை அவ­ருக்கு எதி­ராக எடுக்க வேண்டுமென முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். 

கூட்டு எதிர்கட்­சியில் அங்கம் வகிக் கும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பு­ரிமை பெறும் வைபவம் நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. 

குறித்த நிகழ்வின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  தெரி­வித்­துள்ளார். 

 மேலும் குறிப்­பி­டு­கையில், 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் மற்­று­மொரு முன்­னோக்­கிய நகர்வை ஆரம்­பித்­துள்ளோம். 

இக்­கட்­சியின் இன்­றைய அர­சியல் வேலைத்­திட்­டத்தில் நானும் கலந்­து­கொண் டேன். ஆகவே இப்­ப­ய­ணத்தை முன்­னோக்கிச் செல்­ல­வுள்ளோம். மேலும் எமது அர­சியல் முகா­மாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவே அமைந்­துள்­ளது. 

அத்­துடன் எதிர்­கா­லத்தில் அமை­ய­வுள்ள எமது அர­சாங்­கத்தில் தேசிய வளங்­களைப் பாது­காப்­பது குறித்தும் நாம் நாடு தழு­விய ரீதியில் புத்­தி­ஜீ­வி­களைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறோம். அவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து நாட்டை உரியவகையில் வழி நடத்­து­வ­தற்கும் எதிர்­பார்த்­துள்ளோம். 

2005, 2010, 2015 ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற தேர்­தல்­க­ளிலும் எனது பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்ளேன். அதேபோல் எதிர்­கா­லத்­திலும் எனது பங்­க­ளிப்பை வழங்­குவேன். மேலும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் ஒன்­றாக இணைந்து செயற்­படும் குழு­வினர். 

எனவே எமக்குள் பேதம் இல்லை. 2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள அபேட்­சகர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவே அதனைத் தீர்­மா­னிப்பார். மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பில் போட்­டி­யி­டு­வ­தற்குப் பொருத்­த­மான உறுப்­பி­னர்கள் பலர் உள்­ளனர். 

அதில் மிகப்­பொ­ருத்­த­மா­ன­வ­ரையே அவர் கள­மி­றக்­குவார். மேலும் சர்­வ­தேச ரீதியில் பயங்­க­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட விடு­தலைப் புலி கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயற்பாடாகும். 

அதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது. எனவே அரசியலமைப்பை மீறியவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அவருக்கு எதி ராக மேற்கொள்ள வேண்டும். அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும்  தெரிவித்துள்ளாா்.