Breaking News

இந்திய மீனவர்கள் 7 பேர் கைது.!

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழை ந்து மீன்பிடி தொழிலில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

நெடுந்தீவு அருகே இலங்கை கடற் பரப் பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவர் கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கள் பயணித்த படகினையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசார ணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.