Breaking News

குற்றமிழைத்தவா் ஆளுநரே - முதலமைச்சா் சி.வி.!

முத­ல­மைச்­ச­ருக்கு அமைச்­சர்­களை நியமிக்கும் அல்­லது பத­வி­ நீக்கும் உரித்து இல்லை என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் கூறி­யி­ருக்­கும்­போது அமைச்­ச­ர­வையை உரு­வாக்கு­வ­தற்­கான ஆலோ­ச­னையை நான் எவ்­வாறு வழங்­கு­வது? 

சட்­டத்­திற்கு புறம்­பாக நட­வ­டிக்கை எடுக்­க­வைத்து என்னை மாட்டிவி­டு­வ ­தற்கு பார்க்­கி­றார்­களா உறுப்­பி­னர்கள். ஆளுநர் செய்த பிழையை அவரே சரி­செய்­ய­வேண்டுமென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். 

ஒரு­ மா­கா­ணத்தின் ஆளுநர் தானே பிழை ­செய்­து­ விட்டு தன்­பி­ழையை வைத்து மாகாண ஆட்­சியை கலைக்க முடியும் என்றால் மத்­திய அர­சாங்கம் அதனைச் செய்தே சகல மாகா­ண­ச­பை­க­ளையும் கலைத்­து ­வி­டலாம். 

ஆனால் அவ்­வாறு செய்ய முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். வட­மா­காண அமைச்­சர்கள் விவ­கா­ரத்தில் நீதி­மன்ற தீர்ப்பை அடுத்து எழுந்­துள்ள சர்ச்சை தொடர்­பான கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். 

 மேலும் கூறி­யுள்­ள­தா­வது: 

கேள்வி: வட­மா­கா­ண­சபை கலைக்­கப்படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என்று அவைத்­த­லைவர் கூறு­கின்­றாரே. அதில் உண்­மை­யுள்­ளதா? 

பதில்: இல்லை, ஒரு மாகா­ணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்­சியைக் கலைக்­க­மு­டி­யு­மென்றால் மத்­திய அர­சாங்கம் அதைச் செய்தே எல்லா மாகா­ண­ச­பை­க­ளையும் கலைத்­து­வி­டலாம். 

மேன்­மு­றை­யீட்­டு­மன்றின் தீர்ப்­புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்­த­மா­னியில் டெனீஸ்­வ­ரனை நான் நீக்­கி­யது பற்றி பிர­சு­ரிக்­கா­மையே. வட­மா­கா­ண­சபை சார்­பாக கௌரவ ஆளுநர் தானே ஒரு முக்­கி­ய­மான செயலைச் செய்­யா­து­விட்டு அதை முன்­வைத்து வட­மா­கா­ண­ச­பையை கலைக்க சட்டம் இடம் கொடுக்­காது. அவைத்­த­லைவர் தொடர்ந்து எமது பத­விக்­காலம் வரையில் அவைத்­த­லை­வ­ரா­கவே இருக்­கலாம்! 

கேள்வி: முழு­மை­யான அமைச்­ச­ர­வையை உரு­வாக்கும் ஆலோ­ச­னையை ஆளு­ந­ருக்கு வழங்­குங்கள் என்று உறுப்­பி­னர்கள் நேற்று தீர்­மானம் எடுத்­துள்­ளார்­களே? 

பதில்: முத­ல­மைச்­ச­ருக்கு நிய­மிக்கும் அல்­லது பதவி இறக்கும் உரித்­தில்லை என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் கூறி­யி­ருக்கும் போது நான் எவ்­வாறு ஆலோ­சனை வழங்­கு­வது? 

சட்­டத்­திற்குப் புறம்­பாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பண்ணி என்னை மாட்­டி­விடப் பார்க்­கின்­றார்­களா எமது உறுப்­பி­னர்கள்? ஆளுநர் செய்த பிழையை ஆளு­நரே சரி செய்ய வேண்டும். 

டெனீஸ்­வ­ரனை நான் பத­வி­நீக்கம் செய்­ததை அரச வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­காத குறையை இப்­பொ­ழுதும் நீக்­கலாம். அதா­வது 2017 ஆகஸ்ட் 20 ஆம் திகதி தொடக்கம் பயன்­பாட்­டுக்கு வரும் வகையில் இப்­பொ­ழுதும் கடந்த காலத்தை அளா­விய விதத்தில் அரச வர்த்­த­மா­னியில் பிர­சுரம் இடம்­பெற ஆளுநர் நட­வ­டிக்கை எடுக்­கலாம். 

அதன் பின் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலை உச்ச நீதி­மன்­றத்­திற்கு எடுத்­துக்­காட்டி மேன்­மு­றை­யீட்டுத் தீர்­மா­னத்தைப் புறம் வைக்­கலாம். 

கேள்வி:- வடக்கில் இரா­ணு­வத்தின் வசம் இருந்த 92 சத­வீ­­த­மான காணி கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவம் கூறி­யுள்­ளதே? இது உண்­மையா? 

பதில்:- புளுகு, அண்­டப்­பு­ளுகு, புள்­ளி­ வி­ப­ரங்கள் என்று கூறு­வார்கள் (Lies, Bloody lies and Statistics). அது­போல் இவ்­வி­டயம் அமை­கின்­றது. நாங்கள் பத­விக்கு வந்த போது அதா­வது 2013 கடை­சியில் வலி­காமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி இரா­ணு­வத்­தினர் கைவசம் இருந்­தது. 

இப்­பொ­ழுது அவற்றில் வாசி மட்டில் கொஞ்சம் கொஞ்­ச­மாக கைய­ளித்­துள்­ளார்கள். அதை 92 சத­வீதம் என்று கூறு­வது தாங்கள் 2009இல் கைவசம் வைத்­தி­ருந்த காணி­களின் வீ­தா­சார அடிப்­ப­டையில் தற்­போது 8 சத­வீ­தமே மிகுதி உள்­ள­தென்­ப­தையே அவர்கள் கூறு­கின்­றார்கள். 

இது யாழ்.மாவட்­டத்தில் வலி­காமம் வடக்கில் மட்­டுமே. நாம் பத­வி­யேற்ற போது 65000 ஏக்கர் காணி­களை வட­மா­காணம் முழு­வ­திலும் படை­யினர் கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­தார்கள். 

அவற்றுள் பெரும்­பான்மை அரச காணிகள். அவற்றைப் பற்றி எதுவும் கூறா மல் 92 சத­வீதம் கைய­ளித்து விட்­ட­தாகக் கூறு­வதன் அர்த்தம் அரச காணி ­களைத் தாம் தான்­தோன்­றித்­த­னமாய் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு தொடர்ந்து வைத்­தி­ருக்­கலாம் என்ற எண்­ணத்தில். 

சுமார் 60000 ஏக்கர் வட­மா­காணக் காணிகள் இப்­பொ­ழுதும் படை­யினர் வசம் இருக்­கின்­றன என்­பதே எமக்குத் தரப்­பட்ட ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய புள்ளி விப­ரங்கள். 

கேள்வி:- படை­யினர் முத­ல­மைச்­ச­ரிடம் அனு­மதி கேட்டு வைத்­தி­ய­சா­லை­களில் புள்­ளி­வி­ப­ரங்கள் கேட்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று இரா­ணு­வத்­தினர் கூறு­கின்­றார்­களே? 

பதில்:- - இன்­னமும் அவ­ச­ர­கால நிலைமை நீடிப்­ப­தாக படை­யினர் நினைக்­கின்­றார்கள். அவ­ச­ர­கா­லச்­சட்டம் இல்­லாத தற்­கா­லத்தில் எந்த ஒரு அரச நிறு­வ­னத்தில் சென்று விப­ரங்கள் சேக­ரிப்­ப­தென்­றாலும் அவை அந் நிறு­வ­னங்­களின் தலைமை அதி­கா­ரியின் அனு­ம­தி­யு­ட­னேயே நடை­பெற வேண்டும். 

தம்­பாட்­டுக்குப் போய் பாது­காப்பு என்ற அடிப்­ப­டையில் எதுவும் கேட்க முடி­யாது. அதற்கு சட்டம் இடம்­கொ­டுக்­காது. பாது­காப்பு என்ற போர்­வையில் பல­வி­த­மான அட்­டூ­ழி­யங்­களைப் படை­யினர் இது காறும் புரிந்­துள்­ளார்கள். போர்க்­குற்­றங்கள் அவற்றுள் அடங்­கு­கின்­றன. 

எனவே இவ்­வா­றான தரு­ணங்­களில் பாது­காப்பு படை­யி­னரின் முறை­யற்ற நட­வ­டிக்­கை­களை மக்­க­ளுக்கு எடுத்­து­ரைப்­பது அவ­சியம். அத்­துடன் போர்­மு­டிந்து 9 வரு­டங்கள் நிறை­வ­டைந்த பின் பாது­காப்பு, பாது­காப்பு என்று பய­மு­றுத்தும் படை­யினர் அந்தப் பாது­காப்­புக்­கான கார­ணங்கள் என்ன என்­பதை எங்­க­ளுடன் பேசி முடி­வுக்கு வர வேண்டும். 

வெளிநா­டு­க­ளி­ட­மி­ருந்து எமக்கு பாது­காப்புத் தேவைப்­ப­டு­கி­றதா உள்­நாட்டில் தேவைப்­ப­டு­கின்­றதா என்­பதை அவர்கள் கூற வேண்டும். வெளிநா­டு­களைக் குறிப்­பிட்டு தேசிய பாது­காப்பைப் பற்றிக் கூறு­வது ஒன்று. 

தேசிய பாது­காப்பு வேண்­டு­மெனில் அதை ஏற்­றுக்­கொள்­ளலாம். ஆனால் சும்மா பாது­காப்பு பாது­காப்­பென்று மக்­களின் காணி­களைப் பிடித்துக் கொண் டும் வரு­வாயை எடுத்­துக்­கொண்­டி­ருப்­பதை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். 

அத்­துடன் இவர்கள் தாம் நினைத்­த­வாறு வைத்­தி­ய­சா­லை­யினுள் நுழைந்து தர­வுகள் சேக­ரித்தால் பொலி­சாரின் அதி­கா­ரங்­களை படை­யினர் கைவ­சப்­ப­டுத்­தி­ய­தாக அமையும். உண்­மையில் இரா­ணு­வத்­தினர் இவ்­வா­றான புள்ளி விப­ரங்­களை வைத்­தி­ய­சா­லை­களில் இருந்து சேக­ரிக்க வேண்­டு­மென்றால் பொலி­ஸாரை நாடி அவர்கள் ஊடா­கவே இதைச் செய்ய வேண்டும். 

இரா­ணு­வத்­தி­ன­ருக்குப் போர்க்­காலம் போல் இப்­பொ­ழுதும் அதி­கா­ரங்கள் இருப்­ப­தாக நினைப்­பது தவறு. உண்­மையில் வட­மா­கா­ணத்தில் படை­யினர் தொடர்ந்­தி­ருக்க வேண்­டிய எந்த அவ­சி­யமும் இல்லை. அர­சியல் கார­ணங்­களே அவர்­களை இங்கு நிலை நிறுத்­தி­யுள்­ளன. 

கேள்வி:- வடக்கில் சாதா­ரண மக்­க­ளையும் இரா­ணு­வத்­தி­ன­ரையும் பிரிக்க நீங்கள் எத்­த­னிப்­ப­தாக இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க கூறி­யுள்­ளாரே? அது பற்றி? 

பதில்:- - மகேஷ் எனது நண்பர். அவர் கூறு­வது அந்த வரையில் உண்மை. எமது மக்­களும் இரா­ணு­வத்­தி­னரும் நெருக்­க­மாக இருப்­பதை நான் விரும்­ப­வில்லை. காரணம் அந்த நெருக்­கத்தைக் காட்டி இரா­ணுவம் இன்னும் 1000 வரு­டங்­க­ளுக்கு எமது பிர­தே­சங்­களில் இருந்து வர எத்­த­னிக்கும். 

அதனால் பாதிப்­ப­டை­யப்­போ­வது எமது இனமே. இரா­ணு­வத்தின் வேலை வட­மா­கா­ணத்தில் முடி­வ­டைந்­த­ப­டியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்­வதே முறை­யா­னது. 

அப்­படி இரா­ணுவம் தரித்து நிற்க வேண்­டு­மென்றால் நான் ஏற்­க­னவே கூறி­யுள்ளேன் இரா­ணு­வத்தை ஒன்­ப­தாகப் பிரி­யுங்கள்! ஒன்­பதில் ஒரு பங்கை வேண்­டு­மெனில் ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் நிறுத்­துங்கள் என்று. சலு­கை­க­ளையும் சல்­லி­யையும் தந்து இரா­ணுவம் இங்கு நிலை­பெற நினைப்­பது அவர்கள் எம்மைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­ப­தற்­கா­கவே! 

எங்கள் மீது கரி­சனை இருப்­பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்­பான்­மை­யி­னரின் அர­சி­ய­லுக்கு எமது சாதா­ரண மக்­களின் வறு­மையைப் பாவித்து இரா­ணு­வத்­தினர் உதவ வரு­வது சரிபோல் தெரியும். 

வருங்­கா­லத்தில் பாதிக்­கப்­படப் போவது எமது இன மக்­களே. படை­களில் சில­ருக்கு தெற்கில் ஒரு குடும்பம் வடக்கில் ஒரு குடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை. 

அடுத்து அரசாங்க திணைக்களங்கள் தகவல்கள் இராணுவத்தினருக்கு வழங்கு வது பற்றியும் நண்பர் கூறியிருந்தார். அது பற்றி ஏற்கனவே பதில் கூறி யுள்ளேன். இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தப்போவ தில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவத் தளபதி. அதை நாம் எதிர்பார்ப்பது தான். 

தருணம் வரும் வரையில் தான் இவ்வாறான கருத்துக்கள் தங்கி வாழ முடி யும். தருணம் வந்ததும் விட்டு ஏக வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு இந்திய அமைதிப்படையை வாபஸ் பெற வேண்டியிருந்தது வி.பி. சிங் டில்லியில் பிர தமர் ஆகியதால்! 

இங்கிருந்து நாம் எப்பொழுதும் திரும்ப மாட்டோம் என்ற கூற்றுடன்தான் இந் திய அமைதிப் படையினர் வந்தார்கள். ஆகவே தருணங்கள் எப்போது வரு வன என்று எம்மால் கூறமுடியாது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை.