Breaking News

"சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி தலை சாய்க்க மாட்டாா்" - மஹிந்த சமரசிங்க.!

அமைச்சரவையின் பூரண  மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்ததுடன் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் தலை சாய்க்க மாட்டாா் என துறை முகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள் ளாா்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்துள்ளாா். 

 தொடர்ந்தும் கூறு­கையில், 

நாட்­டுக்குள் போதைப்­பொ­ருட்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் சிறைச்­சா­லை­க­ளுக்குள் இருந்தே போதைப்­பொருள் வியா­பார நட­வ­டிக்­கைகள் வழி­ந­டத்­தப்­ப­டு­வ­தா­க புல­னாய்வு தகவல் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­துள்ளாா். 

இதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக இருந்தால், சிறைச்­சா­லை­களில் இருந்து வழி­ந­டத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக போதைப்­பொருள் நட­வ­டிக்­கை­களில் கைது­ செய்­யப்­பட்டு மரண தண்­டனை தீர்ப்­பாக்­கப்­பட்ட பின்­னரும் சிறைச்­சா­லைக்குள் இருந்­து­கொண்டு இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டு­மென ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் வெளிப்படுத்தியுள்ளாா். 

ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்­துக்கு அன்று அமைச்­ச­ர­வையில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்தை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். தற்­போது யாரும் மரண தண்­டனை தொடர்­பாக விமர்­சிப்­ப­தாக இருந்தால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

அத்­துடன் இது­ தொ­டர்­பாக வேறு­பட்ட கருத்­து­டை­ய­வர்கள் இருக்­கலாம். என்­றாலும் அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்டால் அதனை பாது­காத்­துக்­கொள்­வது அமைச்­ச­ர­வையில் இருக்கும் அனை­வ­ரதும் கூட்­டுப்­பொ­றுப்­பாகும். மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தை விரை­வாக நிறை­வேற்­று­மாறு எழுத்­து­மூலம் சிலர் ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்­ளனர். 

அதே­போன்று இதனை நிறை­வேற்­றக்­கூ­டாது என சிலர் தெரி­வித்­துள்­ளனர். என்­றாலும் அதி­க­மா­ன­வர்­களின் நிலைப்­பா­டாக இருப்­பது மரண தண்­ட­னையை நிறை­வேற்­ற­ வேண்டும் என்­ப­தாகும். அத்­துடன் மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்­துக்கு ஜனா­தி­ப­திக்கு சர்­வ­தேச ரீதியில் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக சிலர் விமா்சித்துள்ளனா். 

இதற்கு ஜனா­தி­பதி அண்­மையில் பதில் அளித்­தி­ருந்தார். அதனால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் ஜனா­தி­பதி சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு ஒரு­போதும் அடி­ப­ணி­ய­மாட்டார். ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு வில் இது தொடர்­பாக கேள்வி எழுப்­பினால் எமது நாட்டின் நிலை­மையை தெளி­வு­ப­டுத்த முடியும். 

சர்­வ­தேச ரீதியில் 54 நாடு­களில் தண்­டனை சட்டம் நிறை­வேற்­றப்­ப­டுகின்­றது. 29நாடு­களில் சட்டம் அமுலில் இருந்­தாலும் எமது நாடுபோன்று தண்ட னையை நிறைவேற்றுவதில்லை.105 நாடுகளில் தண்டனைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.எமது நாட்டுக்கு அண்மை நாடான இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.

நாட்டினதும் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியுமே ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.