Breaking News

கறுப்புப் பட்­டி­யலில் இலங்கை

இலங்­கை­யா­னது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பண மோசடி மற்றும் தீவி­ர­வா­தி­க­ளுக்கு நிதி­வ­ச­தி­ய­ளிக்­கின்­றமை தொடர்பில் அதி உயர் அபாய நிலை­யி­லு ள்ள மூன்றாம் உலக நாடுகள் பட்­டி­யலில் சேர்த்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.


பண மோச­டிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதில் மூலோ­பாய குறை­பாட்­டை­யு­டைய மற்றும் தீவி­ர­வா­தத்­தி ற்கு நிதி­ வ­ச­தி­ய­ளிக்கும் ஆட்­சி­ மு­றை­களை கருத்­திற்­கொண்டு ஐரோப்­பிய ஒன்­றி­ய­மல்­லாத நாடு­களை உள்­ள­டக்­கிய மேற்­படி ஐரோப்­பிய ஆணை ­யகப் பட்­டி­யலில் தியூ­னி­ஸியா, 

இலங்கை, திரி­னிடாட் மற்றும் டொபாகோ உள்­வாங்­கப்­ப­டு­வதை நிரா­க­ரிக்க ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தைச் சேர்ந்த சில உறுப்­பி­னர்கள் தீவிர முயற்சி எடு த்துக் கொண்ட போதும், அவர்கள் அதற்குத் தேவை­யான 376 அறுதிப் பெரும்­பான்மை வாக்­கு­களை எட்டத் தவ­றி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்ற இப் பிரச்­சினை தொடர்­பான வாக்­க­ளி ப்பில் மேற்­படி நட­வ­டிக்­கைக்கு ஆத­ர­வாக 357 வாக்­கு­களும் எதி­ராக 283 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டன. அதே­ச­மயம் 26 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த வாக்­க­ளி ப்பில் கலந்து கொள்­ள­வில்லை. 

தியூ­னி­ஸியா இந்தப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தைச் சேர்ந்த சில உறுப்­பி­னர்­களால் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணையை அடிப்­ப­டை­யாக வைத்து மேற்­படி வாக்­க­ளிப்பு நடத்­தப்­பட்­டது. இந்­நி­லையில் வட ஆபி­ரிக்க நாடான தியூ­னி­ஸியா அந்தப் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­ப­டு­வது சரி­யா­ன­தல்ல என அந்தப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நம்­பு­கின்­றனர். 

அந்­நாட்டை இந்தப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கு­வது அந்­நாடு ஜன­நா­ய­கத்தை ஊக்­கு­விக்கும் வகையில் குற்­ற­வியல் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக தனது நிதி முறை­மையைப் பலப்­ப­டுத்தும் வகையில் அண்­மையில் மேற்­கொண்­டி­ருந்த முன்­ன­டி­யெ­டுத்து வைப்­பு­களை அங்­கீ­க­ரிக்கத் தவறும் ஒரு செயற்­பாடு என மேற்­படி உறுப்­பி­னர்கள் கரு­து­கின்­றனர். 

அத்­துடன் இலங்­கையும் திரி­னிடாட் டொபா­கோவும் தியூ­னி­ஸி­யா­வை­யொத்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக அவர்கள் கூறு­கின்­றனர். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பண மோச­டிக்கு எதி­ரான கோட்­பாட்டின் கீழான கடப்­பா­டு­களின் அங்­க­மாக ஐரோப்­பிய ஆணை­யகம் அதி உயர் அபாய நிலை­யி­லுள்ள மூன்றாம் உலக நாடு­களின் பட்­டி­யலை காலத்­துக்கு காலம் தயா­ரித்து வரு­கி­றது. 

மேற்­படி பாராளு­மன்றம் இந்த கறுப்புப் பட்­டியல் குறித்த மறுப்­பாணை (வீற்றோ) அதி­கா­ரத்தைக் கொண்­டுள்­ளது. இது பண மோசடி மற்றும் தீவி­ர­வா­தி­க­ளுக்­கான நிதி­ வ­ச­தி­ய­ளித்தல் என்­ப­வற்­றி­லி­ருந்து ஐரோப்­பிய நிதி­யியல் முறை­மையை பாது­காக்கும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கவ­ச­மாக நோக்­கப்­ப­டு­கி­றது. 

எனினும் இந்தப் பட்­டியல் பல மாத கால­மாக ஐரோப்­பிய ஆணை­ய­கத்­துக்கும் ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்­துக்­கு­மி­டையில் முரண்­பாடு நில­வு­வ­தற்கு ஒரு கார­ண­மாக அமைந்­தது. .ஐரோப்­பிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதற்கு முன்னர் இது தொடர்பில் தயா­ரிக்­கப்­பட்ட இரு பட்­டி­யல்­களை அந்தப் பட்­டி­யல்­களைத் தொகுக்க ஆணை­ய­கத்தால் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த முறை­மை க்கு எதிர்ப்புத் தெரி­வித்து நிரா­க­ரித்­தி­ருந்­தனர். 

அதன் பிற்­பாடு ஐரோப்­பிய பாரா­ளு­மன்றம் மற்றும் ஐரோப்­பிய ஆணை­யகம் ஆகிய இரு அமைப்­பு­களும் இவ் வருட இறு­தியில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நாடு­களை சேர்த்தல் மற்றும் நீக்­கு­த­லுக்­கான புதிய முறை­மை­யொன்று தொடர்பில் அண்­மை­யி­லேயே இணக்கம் கண்­டி­ருந்­தன. 

இந்­நி­லையில் கடந்த டிசம்பர் மாத மத்­தியில் ஐரோப்­பிய ஆணை­யகம் சர்­வ­தேச நிதியில் செயற்­பாட்டு பணிக்­கு­ழுவின் வழி­ந­டத்­தலைப் பின்­பற்றும் அதன் வழக்­கத்தின் பிர­காரம் தியூ­னி­ஸி­யா­வையும் இலங்­கை­யையும் திரி­னிடாட் மற்றும் டொபா­கோ­வையும் தனது கறுப்புப் பட்­டி­யலில் உள்­வாங்கத் தீர்­மா­னித்­த­தை­ய­டுத்தே தற்­போ­தைய சர்ச்சை தோன்­றி­யுள்­ளது. 

நீதி, பாவ­னை­யாளர் மற்றும் பால்­நிலை சமத்­து­வத்­திற்­கான ஆணை­யாளர் வெரா ஜுவா­ரோவால் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்திற்கு சமர்பிக் கப்பட்டிருந்த அறிக்கையில், தியூனிஸியாவை அந்தப் பட்டியலிலிருந்து அகற்ற சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிரு ந்த கோரிக்கையை நிராகரித்திருந்தார். 

அந்நாட்டில் இது தொடர்பில் ஏற்படக் கூடிய முன்னேற்ற நிலையை இந்த வருடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வரைவில் ஆணையகம் மீள்மதி ப்பீடு செய்யும் எனத் தெரிவித்த அவர், ஆனால் தாம் இன்னும் அங்கு செல்ல வில்லை எனத் தெரிவித்தாா.